நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி

பாளையங்கோட்டையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-08-10 21:45 GMT
நெல்லை, 

நெல்லை தாழையூத்து நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் ஆசீர்வாதம் (வயது 27). இவர் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கார் விற்பனை நிறுவனத்தில் நிதி பிரிவில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். 4 வழிச்சாலையில் சீனிவாசக நகர் பகுதியில் வந்த போது சாலையில் ஒரு லாரி பழுதாகி நின்றிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் பின்பகுதியில் ஆசீர்வாதத்தின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ஆசீர்வாதம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆசீர்வாதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்