மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை

ஓட்டேரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-13 23:15 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 60). இவர் ஆந்திரா வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு அருள்மொழிநங்கை என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் இவர் சமீப காலமாக உடல்நலமின்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் பணியில் இருக்கும்போது விருப்ப ஓய்வு பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 10-ந் தேதி இவருக்கும், மனைவி அருள்மொழிநங்கைக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்து மனமுடைந்த பாலசுப்ரமணியன் திடீரென்று வீட்டின் குளியலறையில் இருந்த திராவகத்தை எடுத்து குடித்துள்ளார். அப்போது இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்மொழிநங்கை உடனே ஓடி வந்து திராவகம் இருந்த பாட்டிலை தட்டிவிட்டார்.

மேலும், இதைத்தொடர்ந்து பதறிப்போன அருள்மொழி, பாலசுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலசுப்ரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்