கள்ளக்குறிச்சி அருகே, பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-23 22:00 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மனைவி பெரியம்மாள். இவர்களுக்கு சரண்யா(17) என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரண்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சரண்யாவின் தாய் பெரியம்மாள், வரஞ்சரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யா, உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்