மோட்டார் சைக்கிள்கள் மோதல்: படுகாயம் அடைந்த வங்கி அதிகாரி சிகிச்சை பலனின்றி சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்த வங்கி அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2019-08-31 22:15 GMT
நாகூர்,

காரைக்கால் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 57). இவர் வேதாரண்யத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று காரைக்கால் செல்வதற்காக நாகை புத்தூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அப்போது மஞ்சக்கொல்லை மார்க்கெட் தெருவை சேர்ந்த ஷாஜூதீன் மகன் சேக் அலாவுதீன், அந்தணபேட்டை வெட்டு குளத்தை சேர்ந்த ஷேக் தாவூது மகன் சாபீக் ஆகிய 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள், சந்திரமோகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

சாவு

இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சந்திரமோகன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்