பொன்னமராவதி அருகே, கல்லூரி மாணவர் தற்கொலை

பொன்னமராவதி அருகே, கல்லூரி மாணவர் எலி மருந்தை (விஷம்) தின்று தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2019-09-11 22:30 GMT
பொன்னமராவதி, 

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் கார்த்திக் ராஜா (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு பேராசிரியர் பாடத்தை சரிவர கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திக் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்