வடகிழக்கு பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

Update: 2019-09-14 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பொதுப்பணித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீர் செய்திடவேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 மற்றும் 18004254556 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்