சேலத்தில் தொழிலாளி மர்ம சாவு

சேலத்தில் தொழிலாளி சாவில் மர்மம் நிலவு கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-14 22:00 GMT
சேலம், 

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக குமார் தனது மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மன்னார்பாளையம் பிரிவு ரோடு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடை முன்பு குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவருடைய உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை யாராவது அடித்து கொன்று அங்கு வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக அவர் இறந்தாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்