ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை

ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-09-15 22:30 GMT
ஊத்தங்கரை,

ஊத்தங்கரை அருகே சாமல்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 28). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர், நித்யா என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் மதுமித்ரன் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் நித்யா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இதே போல அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து வருத்தத்தில் இருந்த செல்வகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் லோகேஷ்(24). டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மனவேதனை அடைந்த அவர் வருத்தத்தில் இருந்தார்.

இந்தநிலையில் லோகேஷ் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற சூளகிரி போலீசார் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்