குடவாசல் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவன் உடல் மீட்பு

குடவாசல் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவன் உடல் மீட்கப்பட்டது.

Update: 2019-09-26 22:45 GMT
குடவாசல்,

குடவாசல் அருகே மணக்கால் ஜீவா நகரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஜெயசீலன் (வயது 15). இவன் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்றுமுன்தினம் ஜெயசீலன் தனது நண்பர்களுடன் வெட்டாற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கினான். தகவல் அறிந்ததும் திருவாரூர் தீயணைப்பு துறை அலுவலர் பக்கிரிசாமி தலைமையில் 20 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி ஜெயசீலனை தீவிரமாக தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

உடல் மீட்பு

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஜெயசீலனின் உடல் ஆற்றில் மிதந்தது. இதுகுறித்து குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி இறந்த மாணவனின் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்