வடக்கன்குளம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுமி பரிதாப சாவு தந்தை படுகாயம்

வடக்கன்குளம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தார். அவருடைய தந்தை படுகாயம் அடைந்தார்.

Update: 2019-09-26 22:07 GMT
பணகுடி,

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்டேடியம் நகரை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 46). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தனது மகள் அஸ்மிதாவுடன் (7) நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை சகாயராஜ் ஓட்டினார். வடக்கன்குளம் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற லாரியும், அவர்களது மோட்டார் சைக்கிளும் எதிர் பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சகாயராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரை சேர்ந்த இசக்கியப்பன் (40) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்