மலிவு விலை வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.15 கோடி மோசடி செய்தவர் கைது
தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சிங் (வயது41). இவர் முதல்-மந்திரி ஒதுக்கீட்டில் மகாடாவில் மலிவு விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.
மும்பை,
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரிகளிடமும் இதேபோல பணம் பறித்து உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தானே போலீசார் மனோஜ்சிங்கை தேடி வந்தனர். இந்தநிலையில் தானே போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் தானே, மும்பை மற்றும் உத்தரபிரதேசத்தில் பலரிடம் மலிவு விலையில் வீடு, வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தானே போலீசார், மும்பையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க மனோஜ்சிங்கை மும்பை பொருளாதார பிரிவு குற்றப்பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.