காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் கல்லூரி மாணவர், எலிமருந்து தின்று தற்கொலை

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் கல்லூரி மாணவர், எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-30 22:15 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பாலாஜி நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் இறந்து விட்டார். மகன் சரவணன்(வயது 19). ஒரு மகள். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. சரவணன், திருச்சி துவாக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார்.

இவர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒரு பெண்ணை தான் விரும்புவதாகவும், அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறுதன் தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தாயார், இப்போது நீ படித்துக்கொண்டு இருக்கிறாய். படிக்கிற வயதில் இது தேவையில்லாத விசயம். எனவே இப்போதைக்கு படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. திருமண வயது வரும்போது அது குறித்து பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

எலிமருந்தை தின்று தற்கொலை

இதனால் மனம் உடைந்த சரவணன் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தான் எலி பேஸ்ட்டை(விஷம்) தின்று விட்டதாக தனது தாயாரிடம் சரவணன் கூறியுள்ளார். அதைக்கேட்டதும் கலைச்செல்வி பதறியடித்துக்கொண்டு தனது மகனை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளார்.

அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்