சேலத்தில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

சேலத்தில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-04 22:30 GMT
சேலம், 

சேலம் குகை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சேலம் அருகே உள்ள புலிகுத்தி ஜங்‌‌ஷன் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் திடீரென்று முருகேசனை வழி மறித்து கத்தியை காண்பித்து மிரட்டி அவர் வைத்து இருந்த ரூ.5,200-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை கந்தசாமி தெருவை சேர்ந்த ஷேக்அலி மகன் அலாவுதீன் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முருகேசனை மிரட்டி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி அலாவுதீனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட அலாவுதீன் மீது ஏற்கனவே செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்