ராமநத்தம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-10-06 22:45 GMT
ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மணிகண்டன்(வயது 21). இவர் நேற்றுமுன்தினம் தனது நண்பர் ஆறுமுகம் மகன் அன்பழகன்(24) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மங்களூரில் இருந்து ஆவட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். ம.பொடையூர் சோழபுரம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே ஆவட்டியில் இருந்து மங்களூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் மணிகண்டன், அன்பழகன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கொடிக்களத்தை சேர்ந்த குணசேகர் மகன் அருண்ராஜ்(25) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணிகண்டன் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அன்பழகன், அருண்ராஜ் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்