சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

Update: 2019-10-08 21:45 GMT
ஆலங்குளம், 

சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்