திருத்துறைப்பூண்டி நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கஜா புயலால் வீடுகளை இழந்த 547 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கக்கோரியும், நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நகர துணை செயலாளர் சுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துகுமரன், பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் வாசு தேவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கஜா புயலால் வீடுகளை இழந்த 547 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கக்கோரியும், நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நகர துணை செயலாளர் சுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துகுமரன், பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் வாசு தேவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.