வெவ்வேறு இடங்களில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-10-10 22:15 GMT
ஓசூர்,

ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 21). தனியார் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜசேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

ஊத்தங்கரை அருகே உள்ள வீரியம்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மனைவி சண்முகபிரியா (29). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

அஞ்செட்டி அருகே உள்ள மரியாளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சசிகலா (32). இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்