விக்கிரவாண்டியில் பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-12 22:30 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 32). சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுஜிதா(28) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சுஜிதா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்து வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுஜிதா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து சுஜிதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்