தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்பு

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் 10 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

Update: 2019-10-14 22:45 GMT
ஓசூர், 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் குருமூர்த்தி(வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ந் தேதி குருமூர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் கோபசந்திரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது திடீரென அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். குருமூர்த்திக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை தேடும் பணியில் சூளகிரி போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மீட்பு குழுவினர் பாத்தகோட்டா பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பரிசல் மூலம் சென்று மாணவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் ஓரத்தில் குருமூர்த்தியின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டனர்.

இது குறித்து அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்