தர்மபுரி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை

தர்மபுரி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-10-14 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள மாரவாடி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவருடைய மனைவி ஆர்த்தி (வயது 26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆர்த்தி வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது ஆர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதும், அவர் வி‌‌ஷம் குடித்து இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கிரு‌‌ஷ்ணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப தகராறில் ஆர்த்தி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்