சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 7 வருடம் சிறை

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 7 வருடம் சிறை தண்டனை வழங்கி சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-10-15 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த பெரிய கண்ணனூரைச்சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இளையான்குடியை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது அந்த வீட்டின் அருகில் வசிக்கும் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரஞ்சித்தை கைது செய்து, அவர் மீது சிவகங்கையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி செம்மல் குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்திற்கு 7 வருட சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்