முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் காயம் 6 பேர் மீது வழக்கு

கொரடாச்சேரி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-11-03 22:15 GMT
கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே உள்ள உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 47). அதே பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (44). விவசாயிகள். இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சுந்தரமூர்த்தி மனைவி லதாவை, முத்துசாமி தரகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சுந்தரமூர்த்தி, முத்துசாமியை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முத்துசாமி, அவருடைய மகன் பிரேம்குமார், உறவினர்கள் சேகர், வினோத் ஆகிய 4 பேரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

6 பேர் மீது வழக்கு

இதேபோல சுந்தரமூர்த்தி, அவருடைய மகன் சூர்யா ஆகியோர் சேர்ந்து முத்துசாமியை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதரப்பினரும் தனிதனியாக கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் முத்துசாமி, பிரேம்குமார் சேகர், வினோத், சுந்தரமூர்த்தி, சூர்யா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்