மனைவி- மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

மனைவி-மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2019-11-26 22:03 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே பள்ளிக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன்(வயது 62), தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவருடைய மனைவியும், மகனும் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். ராஜனின் மற்றொரு மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ராஜன் தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்தார். மனைவியும், ஒரு மகனும் இறந்து விட்டதால் ராஜன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். மேலும், யாரிடமும் சரியாக பேசாமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மாத்திரையை அளவுக்கு அதிகமாக தின்றதாக கூறப்படுகிறது. வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக ெதரிவித்தனர். பின்னர், இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி- மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்