கடல் சீற்றம்: நாகையில், 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடல் சீற்றத்தால் நாகையில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2019-11-27 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று கடல் சீற்றம் காரணமாக 2-வதுநாளாக நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை அக் கரைப்பேட்டை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களும் கரை திரும்ப வேண்டும் என மீனவ பஞ்சாயத்தார் மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்