கிரு‌‌ஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

கிரு‌‌ஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.

Update: 2019-11-29 22:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், மாணவ, மாணவிகளுக்கு, 17 மற்றும் 19 ஆகிய இரண்டு வயது பிரிவில், போட்டிகள் நடத்தப்பட்டது.

தடகள போட்டியில், 100, 200, 400, 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்ட போட்டியும், தொடர் ஓட்டமும் நடந்தது. மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 856 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், குழு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் தடகள போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் குழுவை சேர்ந்த நரசிம்மன், நெப்போலியன், மகேந்திரன், சந்திராரெட்டி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்