கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி

ஆரல்வாய்மொழி அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-01 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கனகமூலம் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). இவருக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல்சூளையில் நாகராஜன் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் நாகராஜனுக்கும், செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் உள்ள தொடர்பை அறிந்த ஜானகி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் கணவனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால், நாகராஜன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நாகராஜன் வீட்டில் இருந்த விஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்