தர்மபுரி அருகே, வாகனம் மோதி அரசு பள்ளி ஆசிரியர் சாவு

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-13 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55). இவர் புலியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னவன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

தர்மபுரி அருகே சங்கம்பட்டி பகுதியில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன், சின்னவன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் ராமகிருஷ்ணனை மேல் சிகிச்சைக்கு சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சின்னவனுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்