தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-19 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனி பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவருடைய மகள் நந்தினி(வயது 15). இவர் தர்மபுரியில் உள்ள அவ்வையார் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்