தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-12-20 22:15 GMT
தூத்துக்குடி, 

பெங்களூருவை தலைமை இடமாக கொண்ட தனியார் ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனத்தின் கிளை அலுவலகம், தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கிளை அலுவலகத்தை தூத்துக்குடியை சேர்ந்த வெயிலுகந்த பெருமாள் (வயது 45) என்பவர் நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள கிளை அலுவலகத்துக்கு வந்து ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது வெயிலுகந்த பெருமாள், அவருடைய மனைவி கோமதி (42), அந்தோணியார்புரத்தை சேர்ந்த அருண்குமார் (44) ஆகியோர் நிறுவனத்துக்கு தெரியாமல் முறைகேடுகளில் ஈடுபட்டு சுமார் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்அடிப்படையில் போலீசார், வெயிலுகந்த பெருமாள், அவருடைய மனைவி கோமதி, அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்