மணல் கடத்தியவர் கைது - மாட்டு வண்டி பறிமுதல்

வாலாஜா அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-21 22:15 GMT
வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம், பூண்டி ரோட்டு தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 32), இவர் நேற்று அதிகாலை பூண்டி பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துள்ளார். 


இது குறித்து பூண்டி கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சேட்டுவை வாலாஜா போலீசார் கைது செய்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்