கார் விபத்தில் தாய், மகன் பலி - 4 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே கார் விபத்தில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-01-02 22:45 GMT
சாத்தூர்,

சாத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கார் பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

பின்னர் சாலை நடுவில் இருந்த தடுப்பை தாண்டி எதிர்திசையில் கோவில்பட்டியில் இருந்து சாத்தூரை நோக்கி வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் கோவில்பட்டியில் இருந்து வந்த காரில் இருந்த பெங்களூரை சேர்ந்த கிரேசி(வயது47) மற்றும் அவரது மகன் அருண்(12) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேேய பலியாகினர்.

மேலும் காரை ஓட்டிவந்த ஜான் மற்றும் ஒருவர் படுகாயங்களுடன் சாத்தூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சாத்தூரில் இருந்து சென்ற காரில் இருந்த 2 பேரும் படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்