காணும் பொங்கலையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலையொட்டி சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2020-01-17 22:15 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலத்தில் குடும்ப சகிதங்கள், நண்பர்கள், சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம், குடும்பமாக சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை சுற்றுலா தலத்திலே மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சறுக்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும், செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும், விளையாட்டு பொருட்களில் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குழாமில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற் பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

சுற்றுலா தலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு இன்னும் அதிகமான விளையாட்டு பொருட்களை அமைக்க வேண்டும்.

பண்டிகை காலங்களில் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே சுற்றுலா தலத்திற்கு வருவதற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும். உள்ளே உணவு உண்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள னர்.

மேலும் செய்திகள்