பாளையங்கோட்டையில் ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி

பாளையங்கோட்டையில் ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-01-19 22:15 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 82). மாற்றுத்திறனாளி. இவர் தொழிலாளர் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகாராஜன் நேற்று காலை பாளையங்கோட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவர், ஊன்று கோலை பயன்படுத்தி நடைமேடையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரெயில் மகாராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும் நெல்லை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள், மகாராஜன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்