திருவாரூரில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை கலெக்டர் வழங்கினார்

திருவாரூரில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

Update: 2020-01-20 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 190 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

திருமண உதவி தொகை

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகையை கலெக்டர் வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமசந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூஷனக்குமார் உள்பட பலர்்் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்