மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-01-22 22:30 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள கோவிந்தராஜபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 75). இவர் கடந்த 20-ந் தேதி நந்திவரத்தில் இந்தியன் வங்கி எதிரே உள்ள சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கண் இமைக்கும் நேரத்தில் காசிநாதன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காசிநாதனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்