அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

அடையாறில் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-29 22:15 GMT
சென்னை, 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 19). இவர், சென்னை அடையாறு கோவிந்தராஜபுரத்தில் உள்ள அவரது மாமா ராஜதுரை வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தங்கியிருந்து, தற்போது கிண்டியில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் ஏ.சி. மெக்கானிக் படித்து வந்தார்.

விஜய் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அடையாறு போலீசார் மாணவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவர் விஜயின் இறப்பு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்