ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது

ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-30 23:18 GMT
மும்பை, 

மும்பை காந்திவிலி ஆர் தெற்கு வார்டு மாநகராட்சி அதிகாரியாக இருந்து வருபவர் சஞ்சீவ் வல்சந்திரா. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்யும் வியாபாரிகளின் உடைமைகளை பறிமுதல் செய்து உள்ளார். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு காய்கறி வியாபாரி, அதிகாரி சஞ்சீவ் வல்சந்திராவை சந்தித்து தனது உடைமைகளை திரும்பி தரும்படி கோரினார். இதற்கு அதிகாரி ரூ.12 ஆயிரம் லஞ்சமாக தந்தால் திருப்பி தருவதாக தெரிவித்தார். பணம் தருவதாக கூறிய வியாபாரி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் யோசனைப்படி வியாபாரி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த அதிகாரியை சந்தித்து பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்ற அதிகாரி சஞ்சீவ் வல்சந்திராவை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்