ரூ.7 கோடி மோசடி வழக்கில் அரசு பெண் ஊழியர் கைது; விமான நிலையத்தில் சிக்கினார்

மும்பையை சேர்ந்தவர் திரிஷா பட்டேல் (வயது50). அரசு ஊழியராக இருந்து வருகிறார். இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு ரூ.7 கோடி மோசடி செய்ததாக எல்.டி மார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து திரிஷா பட்டேல் தலைமறைவாகி விட்டார்.

Update: 2020-01-30 23:23 GMT
மும்பை, 

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் துபாய்க்கு தப்பி சென்றதாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தப்பி சென்ற திரிஷா பட்டேல் சம்பவத்தன்று மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் விமான நிலையம் சென்று அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்