கொரோனா வைரஸ் பரவல்: பேரழிவுக்கான உயிரி ஆயுதமா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்; சிவசேனா சொல்கிறது

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-01-31 23:49 GMT
மும்பை, 

சீனாவில் உள்ள உயிரியல் ஆய்கவகத்தில் தான் ‘கொரோனா' வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. உயிருக்கு ஆபத்தான வைரஸ்கள் எப்போதுமே சீனாவில் தான் உருவாகின்றன. அவை எவ்வாறு உருவாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் பேரழிவுக்கான உயிரி ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியாக இந்த வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்பதை உலக சமூகம் கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்