திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6–ந் தேதி ரோகிணி நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2020-02-03 22:15 GMT
திருவண்ணாமலை, 

ஆகம விதிகளின்படி எந்த தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததோ அதே மாதம் அதே நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் ரோகிணி நட்சத்திரம் இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இன்று வருஷாபிஷேக விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு முதல் காலை பூஜைகள் தொடங்கியது.

 தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு 2–ம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 10 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாட்டுக் கோட்டை நகரத்தார், உபயதாரர்கள் செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்