அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2020-02-09 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் 113 மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் முகே‌‌ஷ்குமார், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், தாசில்தார் பாரதிவளவன், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்