கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-02-11 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே சோமசமுத்திரம் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 59). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தனது கிராமத்தில் இருந்து பெரிய நாகபூண்டி கிராமம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரது கூச்சலை கேட்டு கிணற்றில் எட்டி பார்த்தனர்.

சாவு

படுகாயத்துடன் காணப்பட்ட சுரேஷ் குமாரை கிணற்றில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்