நாளை மறுநாள் மின்தடை
குழித்துறை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
குழித்துறை,
சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர் சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய ஊர்களுக்கும், அதனை சேர்ந்த கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.