திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

அரக்கோணம் அருகே திருமணமான 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-12 21:00 GMT
அரக்கோணம், 

அரக்கோணத்தை அடுத்த நாகவேடு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிப் முகமது (வயது 25), சென்னையில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரது மகள் ஹாஜிரா (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஹாஜிராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஹாஜிராவின் தந்தை காஜா மொய்தீன் அரக்கோணம் தாலுகா போலீசில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் மனு கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஹாஜிராவுக்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்