மராட்டியத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மராத்தி பாடம் கட்டாயம் சட்டசபையில் மசோதா தாக்கல்

மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பள்ளிகளில் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

Update: 2020-02-12 23:00 GMT
மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. அப்போது இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக மாநில தொழில்துறை மற்றும் மராத்தி மொழி மந்திரி சுபாஷ் தேசாய் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மசோதா

மராட்டியத்தில் மராத்தி பாடத்தை கற்றுக் கொடுக்காத 25 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மராத்தி விருப்ப பாடமாக கூட கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. மராட்டியத்தில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கற்று கொடுக்கப்படுவது இனி கட்டாயமாக்கப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் மராத்தியை பள்ளிகளில் கட்டாயமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான வரைவு மசோதா இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

மேலும் செய்திகள்