8 வீடுகள் எரிந்து நாசம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் அருகே 8 வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2020-02-12 20:52 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி அருந்ததிபுரம்  பகுதியில் பாலாஜி, சத்யா, சூர்யா, ராஜா, வெங்கடேசன், சந்திரன், கோபி, சுரேஷ் உள்ளிட்ட 8 பேர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. இந்தநிலையில் தீ விபத்தால் வீடுகளை இழந்த குடும்பத்தினரை அ.தி.மு.க. கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அரிசி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் துணை தாசில்தார் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் சொர்ணலதா, ஒன்றிய அவைத்தலைவர் இன்பநாதன், கூவம் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் அழிஞ்சிவாக்கம் பாசூரான், கண்ணூர் சீனிவாசன், சின்னா கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தேவி கலா தேவா, துணைத்தலைவர் சந்தோஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்