திருவள்ளூர் அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு

திருவள்ளூர் அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது.

Update: 2020-02-12 20:58 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 49). இவர் அதே பகுதியில் எண்ணெய் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல சாம்ராஜ் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந் தார். பின்பு கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1,700 திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்