எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; இன்று நடக்கிறது

பெரம்பலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Update: 2020-02-20 22:15 GMT
பெரம்பலூர், 

கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள், எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். 

மேலும் எரிவாயு வினியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம். 

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்