கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் நேற்று கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த மீஞ்சூரை சேர்ந்த மணி(வயது 23) மற்றும் மோகன்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.