அரியலூரில் மகளிர் தினவிழா மாவட்ட முதன்மை நீதிபதி கலந்து கொண்டார்
அரியலூரில் ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா ராஜாஜி நகரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்,
அரியலூரில் ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா ராஜாஜி நகரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு தலைமை செயல் அதிகாரி ஜெ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, அறிமுக உரையாற்றினார். இதில் அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு, சுயதொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அறக்கட்டளை பொறுப்பாளர் பத்மாவதி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். எம்.எம்.மருத்துவமனையின் தலைமை அதிகாரி டாக்டர் இசையொலி மதன்குமார், அரியலூர் மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னியம்மாள், எழுத்தாளர் சோபனா பன்னீர்செல்வம் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள், அனைத்து ஆசிரியர் கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சங்கர் நன்றி கூறினார்.
அரியலூரில் ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா ராஜாஜி நகரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு தலைமை செயல் அதிகாரி ஜெ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, அறிமுக உரையாற்றினார். இதில் அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு, சுயதொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அறக்கட்டளை பொறுப்பாளர் பத்மாவதி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். எம்.எம்.மருத்துவமனையின் தலைமை அதிகாரி டாக்டர் இசையொலி மதன்குமார், அரியலூர் மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னியம்மாள், எழுத்தாளர் சோபனா பன்னீர்செல்வம் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள், அனைத்து ஆசிரியர் கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சங்கர் நன்றி கூறினார்.